பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படு ம். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
பல மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம்,விடுதி கட்டணம், பாடபுத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு பொருளாதார வசதி இல்லாமல், உயர்கல்வியை நிறுத்தும் நிலை உள்ளது.ஏழைமாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்ய, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன. தெரிவதில்லைஆனால், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு மாணவர்களின் உண்மையான நிலை தெரிவதில்லை; உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும், சரியான தொண்டு நிறுவனங்கள் குறித்த தகவல் கிடைப்பதில்லை.அதனால், கல்வித்துறை அலுவலகங்களை தொண்டு நிறுவனங்கள் நாடுகின்றன. இந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை பள்ளிகளில் வெளியிட, பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்படுகிறது.
ஆனால், பெரும்பாலான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அல்லது பணியாளர்கள், இந்த விவரங்களை பள்ளிகளுக்கு தெரிவிப்பது இல்லை. அறிவிப்பதில்லை சில அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அளித்தாலும், அந்த பள்ளிகள் சார்பில், பொருளாதார உதவி குறித்த தகவல்களை மாணவர்களுக்கு அறிவிப்பதில்லை என, பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த பிரச்னைகளை போக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக இணையதளங்களில் இந்த சுற்றறிக்கைகளை வெளியிட்டு, மாணவர்களுக்கு தகவல் அளிக்கலாம் என, பெற்றோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை