Ad Code

Responsive Advertisement

தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.


ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் என, நான்கு பேர், பூத் சிலிப் வழங்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந் திரங்களை கையாள்தல், படிவம் பூர்த்தி செய்தல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், முடிந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி, மூன்று கட்டமாக அளிக்கப்படும். தேர்தல் பிரிவினர் கூறியதாவது:


தேர்தல் பணியாற்றும் அலுவலர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. முதல்கட்ட பயிற்சி, 24ல் அளிக்கப்படும். படிவங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாள்தல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டி மற்றும் தேர்தல் நடைமுறை, விதிமுறை குறித்த புத்தகங்கள் வழங்கப்படும்.



மூன்றாம் கட்டமாக, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான, 15ம் தேதி காலையில், பயிற்சி அளிக்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர் எந்த தொகுதியில், எந்த ஓட்டுச்சாவடியில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்ற உத்தரவு வழங்கப்படும்; அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று உடனடியாக பணி ஏற்க வேண்டும்; தேர்தல் பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்களில் அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement