துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.
துவக்க,நடுநிலை பள்ளிகளுக்கு தேர்வு தேதி குறித்து கேள்வி எழுந்தது. துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு, 22ம் தேதி தேர்வு துவங்குகிறது. 23ம் தேதி தேர்வு இல்லை என்றாலும் பள்ளி நடைபெறும்.24ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, 25ம் தேதி முதல்28ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. 29,30 தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும். உடற்கல்வி, ஓவியம் வரைதல் உள்ளிட்டவை நடைபெறும்.220நாட்கள் பள்ளி நடைபெற வேண்டும் என்பது விதிமுறை. அதற்காக தேர்வுக்கு பின்னரும் இரு தினங்கள் பள்ளிகள் செயல்பட உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை