Ad Code

Responsive Advertisement

10, பிளஸ்-2 புத்தகம் விநியோகம்

தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன்மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்காக 82 லட்சம் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநுால் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.இதில், தனியாக விண்ணப்பித்து பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதுபோல் 10 ஆயிரத்து 900 பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அரசு பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய புத்தகங்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



இதே போல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 58 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தாலுகா அலுவலகங்கள், கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும் பதிவு செய்து புத்தகங்களை பெறலாம்.ஆன்-லைனில் பதிவு செய்து பெற விரும்புவோர் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்து பணம் செலுத்தி பதிவு செய்தும் பெறலாம். 72 மணி நேரத்தில் மாணவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.---

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement