பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதில், மாநகராட்சி, மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி, கிராமம் என 5 வகைகளாகப் பிரித்து, அதற்கு உள்பட்ட இடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இட பரப்பளவு விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதை எதிர்த்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சங்கர மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசாணை நடைமுறையில் இருக்கும்போது, மனுதாரர் பள்ளியை நடத்துவதற்காக 3 மாடி கட்டடத்தைக் கட்டியுள்ளார். கட்டி முடித்த பிறகே அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளார். இதுதவிர, அரசாணையில் தலையிடுவதற்கான காரணங்கள் இல்லை. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறதுஎன்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை