தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஒருவரது உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பாக தகவல் கோரப்பட்டால் அது குறித்து 48 மணி நேரத்தில் தகவல் தரப்பட வேண்டும் என்று மக்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.இது குறித்து மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய ஊழியர் நலன், பொது குறைதீர் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கோரப்படும் கேள்விகளுக்கு, விண்ணப்ப மனு பெறப்பட்ட 30 நாள்களுக்குள் தகவல் அலுவலர் உரிய தகவலையோ அல்லது நிராகரிப்பதற்கான காரணத்தையோ கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்.எனினும், ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களைக் கோரி வரும் விண்ணப்பம் வந்தால் அது கிடைத்த நாளில் இருந்து 48 மணி நேரத்திற்குள் உரிய பதிலை அளிக்க வேண்டும்.
தலைமை த் தகவல் ஆணையர் உள்பட ஒவ்வொரு தகவல் ஆணையரும் ஒவ்வோர் ஆண்டும் 3,200 மேல்முறையீடுகள் அல்லது புகார்கள் மீது நடவடிக்கை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் 2011 மார்ச் 22ஆம் தேதி முடிவு செய்தது. 2015-ஆம் ஆண்டில் மொத்தம் 27,922 மேல்முறையீடுகள் அல்லது புகார்கள் பைசல் செய்யப்பட்டன என்று அமைச்சர் கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை