பிளஸ் 2 கணித தேர்வில், சில புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் குழப்பமடைந்தனர்; நீண்ட பதிலளிக்க வேண்டிய கேள்விகளால், நேரமின்றி தவித்தனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று கணித தேர்வு நடந்தது. வினாத்தாளில், ஆறு மதிப்பெண்ணுக்கான கட்டாய கேள்விகளில், 46, 47, 52 மற்றும், 55ம் எண் கேள்விகள்,இதுவரை முந்தைய தேர்வில் இடம்பெறாத புதிய கேள்விகளாக இருந்தன மொத்தமுள்ள, 10 பாடங்களில், 8.6வது பிரிவு அல்லது, 8.5வது பிரிவில் இருந்து, 10 மதிப்பெண்களில், ஒரு கேள்வி எதிர்பார்க்கப்படும்.
இந்த முறை, 8.5வது பிரிவில் இருந்து மட்டும், ஒரு கேள்வி இடம் பெற்று இருந்தது. அதுவும், 'புளூ பிரின்டில்' கூறியுள்ள படி, புத்தகத்திற்கு வெளியே இருந்து சிந்தித்து எழுதும் வகையில் கேட்கப்பட்டதால், மாணவர்கள் சற்று திணறினர்43வது கேள்வியில், பொருள் மாறாமல், சிந்திக்கும் வகையில் கேள்வியின் வடிவம் மாறியிருந்ததால், மாணவர்கள் தடுமாறினர் ஆறு மதிப்பெண் கேள்விகளுக்கான பதில் நீளமாக இருந்ததால், அவற்றை எழுத மாணவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டு, நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. நேற்று நடந்த, பிளஸ் 2 புவியியல் தேர்வும், சற்று கடினமாகவே இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
'சென்டம்' குறையும்!
வினாத்தாளில் பிழையோ, குழப்பமோ இல்லை. சில கேள்விகள் மாணவர்களை சிந்தித்து எழுத செய்வதாக இருந்தது. இது வரையிலான தேர்வுகளில் இடம் பெறாத புதிய கேள்விகள், இந்த முறை இடம் பெற்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள், எளிமையாகவே இருந்தன. தேர்ச்சி பாதிக்காது; 'சென்டம்' வாங்குவோர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை