பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ–மாணவிகள் கூறுகையில், கேள்விகள் எளிமையாக இருந்தன என்றும், மழை வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் கையேட்டில் இருந்து தான் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன என்றும் தெரிவித்தனர்.
நேற்று காப்பி அடித்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு மாணவரும், கரூர் மாவட்டத்தில் ஒருவரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும், கடலூர் மாவட்டத்தில் ஒருவரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேரும், சென்னை மாவட்டத்தில் 3 பேரும் பிடிபட்டனர்.இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை