தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. தேர்வுகளை கண்காணிக்க, அண்ணா பல்கலை பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாணவர்கள், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்துவரக்கூடாதுஆசிரியர்களும், தேர்வு மையத்துக்குள் மொபைல் போன் எடுத்து வரக் கூடாதுமாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் விதிமுறைப்படி தண்டனை வழங்கப்படும்தனியார் பள்ளி தேர்வு மையங்களில், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை:பொதுத்தேர்வில், கடந்த ஆண்டு போல் வினாத்தாளில் பிழை, 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள், 'லீக்' போன்ற சம்பவங்களோ, முறைகேடுகளோ ஏற்படாமல் இருக்க, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத்துறைஅதிகாரிகள், நேற்று சிறப்பு பூஜை நடத்தினர். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில், 300 பேருக்கு புளியோதரை, தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என, அன்னதானம் வழங்கப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை