வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 பேரவைத் தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அவற்றை சரிபார்க்கும் பணிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் நடைபெற்று வருகின்றன.
இத்தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் ரசீதுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் 17 தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அண்ணாநகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வடக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, திண்டுக்கல், திருச்சி மேற்கு, கடலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை கிழக்கு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பேரவைத் தொகுதிகளிலும் இந்த வசதி பயன்படுத்தப்படும்.
இயந்திரத்தில் வேட்பாளர் படம் தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வேட்பாளர்களின் பெயர்களுடன் அவர்களது படமும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றன.
அதேபோல, வரவிருக்கும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளர்கள் பெயர் படத்துடன் இடம் பெறும். இதன் மூலம் ஒரே பெயரில் இரண்டு மூன்று பேர் போட்டியிட்டாலும், வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படாது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை