Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு பணியை பார்க்க உத்தரவு: ஊத்துக்கோட்டையில் வினோதம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டசபை தேர்தல் பணியை பார்க்க, ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு வழங்கப்பட்ட புத்தக பையை, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு பள்ளிகளுக்கு திரும்பினர்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'கடந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பில், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்பார்வையில், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த முறை, ஆசிரியர்களே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டி உள்ளது. அதனால், நாங்கள் தேர்தல் பணியை மட்டுமே செய்ய முடிவு எடுத்து உள்ளோம்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement