Ad Code

Responsive Advertisement

குரூப் 2ஏ தேர்வு: தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது

தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர்-நேர்முக எழுத்தர் பதவிகளில் காலியாகவுள்ள குரூப் 2ஏ தொகுதியில் வரக்கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 116 இடங்களில் ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகள் எழுத உள்ளனர். தேர்வு மையங்களைக் கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு: தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement