தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர்-நேர்முக எழுத்தர் பதவிகளில் காலியாகவுள்ள குரூப் 2ஏ தொகுதியில் வரக்கூடிய 1,947 காலியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 116 இடங்களில் ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் பட்டதாரிகள் எழுத உள்ளனர். தேர்வு மையங்களைக் கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு: தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை