Ad Code

Responsive Advertisement

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 12ம்  தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 

இந்நிலையில், சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடியோடு முடங்கியது. 
இதன் காரணமாக, வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராகி  வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினா தாட்கள் ஆகியவை  வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டன.  தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள்  மட்டுமே உள்ளதால் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது  சாத்தியமானது  அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான  மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 


அந்த மாவட்டத்தை   சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க  முடியாது. மழை வெள்ளத்தில் மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த  துயரம்  மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும்  கடினம். 

மேலும், மழை பெய்த நேரத்தில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் சேவையும் அடியோடு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை இன்டர்நெட்  சேவை மிகவும் மெதுவாகவே உள்ளது. இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர், தேர்வு எழுதுவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (14ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி எழுத்து  தேர்வும் நடைபெற உள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மழையால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக  வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், விண்ணப்பிக்கும்  தேதியை நீட்டிக்க ேவண்டும் என்ற ேகாரிக்கை தற்போது எழுந்துள்ளது.  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement