முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, பொதுத்தேர்வு எழுதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, வினா - விடை வங்கி புத்தகம் வழங்கும் விழா, அ.தி.மு.க., சார்பில் பொள்ளாச்சியில் நடந்தது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதா தான். அதிலும், மடிக்கணினி வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.வரும், 2023ல், ஒவ்வொருவரும், 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளமாக பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கல்விக்கான உதவிகளை, முதல்வர் வழங்குகிறார்.
நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் முதல்வரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசுகையில், ''தமிழக முதல்வர், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அறிவியல் கண்டுபிடிப்புகளை, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அவர் ஒரு சமூக விஞ்ஞானி,'' என்றார். இதில், எம்.பி., மகேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் முத்து கருப்பண்ணசாமி, சண்முகவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை