தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய, நரகாசுரன் என்ற அரக்கனை, திருமால் அழித்த தினமே, தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள், இருள் விலகி, ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து, நன்மை சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும், மக்களால் கருதப்படுகிறது. இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும், வளமும், நலமும் பெருகட்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை