Ad Code

Responsive Advertisement

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்

இதனால், 928 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பவில்லை.இந்த காலி இடங்களை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் அடங்கிய, புதிய முன்னுரிமை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் இடையே, சலுகை, சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. பதவி உயர்வை ஏற்றால், வேறு ஊருக்கு மாற்றலாக வேண்டுமே என பயந்து, பதவி உயர்வை வேண்டாம் என உதறி விடுகின்றனர்.விரைவில் நடத்த உள்ள பதவி உயர்வு கலந்தாய்விலும், அனைத்து இடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.


பாட வாரியாக காலியிடங்கள் விவரம்

  • தமிழ் 100
  • ஆங்கிலம் 160
  • கணிதம் 80
  • இயற்பியல் 100
  • வேதியியல் 70 
  • தாவரவியல் 63
  • விலங்கியல் 70
  • வரலாறு 143
  • வணிகவியல் 73
  • பொருளியல் 69
  • மொத்தம் 928

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement