யுனிசெப் நிறுவனம் சென்னையில் செயல்பட்டுவரும் சமூகக் கல்வி நிறுவனம் என்ற அமைப்புடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் குழந்தை நேயப் பள்ளிகளை உருவாக்கும் முனைப்புடன் சில செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
குழந்தைகள் விரும்பும் பள்ளிகளாக இன்றைய பள்ளிகள் இருக்கின்றனவா?. அத்தகைய பள்ளிகளை உருவாக்க தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர், சமூகம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடையாக குழந்தை நேய பள்ளிகளுக்கு மாதிரியாக விளங்கும் நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கருப்பையன் அவர்கள் குழந்தைகள் நேயப் பள்ளியை உருவாக்க தான் பயணித்து வந்த பாதையை அனைவரோடும் பகிர்ந்து கொண்டார்.
நாம் அனைவரும் நம் பள்ளிகளை குழந்தை நேய பள்ளிகள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு கூறாக எடுத்துப் பார்த்தால் நம் பள்ளி குழந்தைகள் விரும்பும் பள்ளியாக இருக்குமா என்பது சந்தேகம் தான். குழந்தைகள் விரும்பக்கூடிய சுற்றுச்சூழல், கற்றல் சூழல், படிக்கும் பாடம், கற்பிக்கும் முறைகள், கற்றதை சோதிக்கும் முறைகள் இவைகள் இருக்குமா என்றால் சந்தோகம் தான். வீட்டுக்குச் செல்லும் போது இருக்கும் மகிழ்ச்சி பள்ளிக்குள் வரும் போது காணாமல் போகிறது. குழந்தைகள் விரும்பும் சூழல் இருந்தால் தான் கற்றல் நிகழும்.
இத்தகைய பள்ளிகளை தமிழகம் முழுவதும் உருவாக்கும் நிகழ்வின் முதல் படியாக 150 பள்ளிகளை மாதிரி குழந்தை நேயப் பள்ளிகளாக உருவாக்கும் முயற்சியை யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து மேற்கொண்டுள்ளோம். இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பள்ளிகளை மாற்றுவதற்கு இலக்கு வைத்துள்ளோம். ஒரு check list தயார் செய்து அந்த check list ல் இருக்கும் செயல்பாடுகள் ஒரு பள்ளியில் இருந்தால் அது குழந்தை நேயப் பள்ளி என வரையறுக்கப்பட்டுள்ளது.
நாங்களாக பள்ளிகளை தேர்ந்தெடுத்தால் அந்த பள்ளி check list ல் உள்ள அனைத்தும் தங்களிடம் இருப்பதாக கூறி தங்கள் பள்ளி குழந்தை நேயப் பள்ளி என்று அறிவித்து விடும். ஆனால் நிஜமாக அந்த பள்ளி குழந்தை நேயப் பள்ளியாக இருக்காது.
அதனால் தாங்களாகவே முன்வந்து தங்கள் பள்ளிகளை குழந்தை நேயப் பள்ளிகளாக மாற்றம் செய்ய விரும்பும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் check list ல் இல்லாத செயல்பாடுகளை தங்கள் பள்ளிகளில் கொண்டுவர முயற்சிப்பர். அப்படி முயற்சிக்க விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் விருப்பத்தை இங்கே தெரிவியுங்கள். உங்களுக்கு யுனிசெப் நிறுவனத்தோடு இணைந்து குழந்தை நேய பள்ளிகளை உருவாக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்க இயலாது. விருப்பமுள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள். சமத்துவக் கல்வி அமைப்பில் தொடர்புகொள்ள ஷியாம் சுந்தர் - 9750966400
நன்றி : TRS TIRUCHY
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை