மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களின் திறனை ஊக்குவிக்கவும், கற்பித்தல் கற்றல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பாடவாரியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆய்வுகளின் மூலம், தமிழ் மொழிப்பாடத்தில், மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, 'தமிழ் படித்தல், எழுதுதல் திறன் வளர்த்தல்' என்ற தலைப்பில், ஆசிரியர் களுக்கு தனிப்பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் பாடத்தை நயத்துடன் படித்தல், புள்ளி, கமா போன்ற குறியீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வாசித்தல், வாசித்தலில் குறில் நெடில் பயன்பாடு, பிழையின்றி எழுதுவது, வாக்கியங்களை அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் ஆசிரியர் களுக்கு அளிக்கப்பட உள்ளன.
இப்பயிற்சிகள், மாவட்ட அளவில், அக்., 12, 13 என, இரு தினங்களிலும், ஒன்றிய அளவில், அக்., 15, 16 என இரு தினங்களிலும் அளிக்கப்படுகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை