Ad Code

Responsive Advertisement

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனின் ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன். காலாண்டுத் தேர்வில் எஸ்எஸ்எல்சி ளஸ் 2 வகுப்புகளில் 60 சதவிகித்த்துக்கும் குறைவாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசியர்கள், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:

அரசுப் பள்ளிகளில் கல்விப் பயிலும் மாணவ, மாணவிகள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். சில மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியதிருக்கும்.

அவர்கள் கல்விப் பயிலும் சூழ்நிலையை அறிந்து அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்ய வைப்பது ஆசிரியரின் கடமையாகும். தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளின் மீது தனிகவனம் கொண்டு அவர்களின் நலனின் அக்கறைச் செலுத்தி, பாடங்களை நடத்திட வேண்டும்.

அப்படி செய்யும்போதுதான் அரையாண்டுத் தேர்வில் அதன்பலன்களை பெற முடியும். ஆண்டு இறுதித்தேர்வில் சாதனை படைக்க முடியும். எனவே இதனை கவனத்தில் கொண்டு பாடங்களை நடத்த வேண்டும்.

இதுவரை 5 மாவட்டங்களில் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது என்றார் கண்ணப்பன்.

கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி ஆகியோர் பேசினர்.

காலையில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி வகுப்புக்கான கூட்டத்தில் 56 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 152 ஆசிரியர்களும், பிற்பகலில் பிளஸ் 2வகுப்புக்கான கூட்டத்தில் 40 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், 100 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement