Ad Code

Responsive Advertisement

போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்'

தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஜி.வி.கே., நிறுவனம், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது; இதில், 3,500 ஊழியர்கள் உள்ளனர். தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் தர, நிர்வாகம் மறுத்ததால், நவ., 8 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஊழியர்கள், 40 பேருக்கு, ஜி.வி.கே., நிறுவனம், 'டிஸ்மிஸ்' நோட்டீஸ் அளித்துள்ளது. 

இதை எதிர்த்து, தொழிலாளர்கள் நேற்று, தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.


இதுகுறித்து, தொழிலாளர் சங்க செயலர் பால்கண்ணன் கூறுகையில், ''ஸ்டிரைக் அறிவித்துள்ளதால், பழி வாங்க, 40 பேருக்கு டிஸ்மிஸ் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, தொழிலாளர் நலத்துறையில் புகார் செய்துள்ளோம். விசாரணை, நவ., 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதை மறுத்த, ஜி.வி.கே., நிர்வாகிகள், 'விதிகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement