சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அதன்படி பயனீட்டாளர்கள் அவர்களது பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி மேகக் கணினி (Cloud Computing) சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன்மூலம் கணினிசார் கட் டமைப்புக்காக நிறுவனங்கள் செல விடும் நிதி பெருமளவு குறையும்.இந்நிலையை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறு வனம், இந்தியாவிலேயே முதல் முறையாக 3 தரவு மையங்களை அமைக்கவும், அவற்றின் மூலம் மேகக் கணினி சேவைகளைவழங்கவும் நடவடிக்கை எடுத் துள்ளது.
அதில் ஒன்றான சென்னையில் அமைக்கப்பட் டுள்ள தரவு மையம் வழியாக மேகக் கணினி சேவையை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தை டிஜிட்டல் மயமாக்க இந்த சேவை பெரிதும் உதவும்.இந்நிகழ்ச்சியில் மைக்ரோ சாப்ட் (இந்தியா) நிறுவனத்தின் மேலாண் இயக்குநர்கரண் பஜ்வா கலந்து கொண்டார். அவரிடம் முதல்வர், ‘‘தமிழகத்தில் மைக்ரோசாப்ட் தொடங்கியுள்ள சேவையை வரவேற்பதுடன், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை