இன்று நடக்கவிருக்கும் வேலை நிறுத்த போராட்டத்தினால், பள்ளிகள் செயல்படுவதில் தடை ஏற்படாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள சங்கத்தினரும், பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளதாக சில சங்கத்தினர் தகவல் கூறியுள்ளனர். இதனால் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் இயங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், வேலை நிறுத்த போராட்டத்திற்கும், பள்ளிகள் செயல்படுவதற்கும் என்ற தொடர்பும் இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துப்பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை