மழை பெய்தபோது செல்போனில் பேசிய வாலிபர் மின்னல் தாக்கியதால் பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்த நண்பர் படுகாயமடைந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த கழிவந்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (23), தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 27ம் தேதி தனது நண்பருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், காயரம்பேடு அருகே பைக்கை நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தின் அடியில் வினோத்குமார், தனது நண்பருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, வினோத் செல்போனில் அழைப்பு வந்துள்ளது. உடனே, அவர் போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார்.
அருகில் நின்றிருந்த நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், வினோத்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயமடைந்த நண்பர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த வினோத்குமாருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை