இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: 2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் இளநிலை கலை, அறிவியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விருப்பமுள்ள மாணவர்கள் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 1,200 மாணவர்களை பணிக்காகத் தேர்வு செய்ய உள்ளன. முகாம் மூலம் அளிக்கப்படும் பணிகள் அனைத்தும் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மாத ஊதியம் கிடைக்கக் கூடிய பகல் நேரப் பணிகளாகவே இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு 95516 90630, 95516 90631 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை