அரசு மருத்துவமனையில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புள்ள, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புடைய, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபையில், முதல்வர் ஜெ., அறிவித்தார்.அதன்படி, நடப்பாண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாயில், 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து குழந்தைகளின் தாய்களுக்கு, பெட்டகத்தை வழங்கினார்.
சோப்பு, ஷாம்பு:
பெட்டகத்தில், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்கு தேவையான, துண்டு; குழந்தைக்கான உடை; படுக்கை; கொசு வலை; நாப்கின்; 100 மி.மீ., அளவுடைய எண்ணெய் டப்பா; பிளாஸ்டிக் குப்பியில், 6 மி.லி., ஷாம்பு, சோப்புடன் கூடிய சோப்பு பெட்டி; நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை; சுத்தமான கைகளுடன், குழந்தையை பராமரிக்க, பிளாஸ்டிக் டப்பாவில், 250 மி.லி., அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு, 100 கிராம் எடையுள்ள சோப்பு ஆகியவை இருக்கும்.
'சவுபாக்கியா' லேகியம்
மேலும், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும், 'சவுபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை பராமரிக்க தேவையான, பொருட்களை வைத்துக் கொள்ள பெட்டகம், என, 16 வகையான, பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை