அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இதுதொடர்பாக சத்துணவு துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.2 கோடிதமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளிகளில், சத்துணவு கூடங்கள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், 5.40 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுக்காக மாதம்தோறும், 2 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இச்செலவை கட்டுப் படுத்தவும், உணவு வீணாகாமல் தடுக்கவும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் குறித்த கணக்கெடுப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும்.
இதன் மூலம்,இடைநிறுத்தம், புதிய மாணவர் சேர்க்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்படும், இந்த கணக்கெடுப்பு சத்துணவுத்துறைக்கு அனுப்பப்படுகிறது. கட்டுப்படுத்தப்படும் அதன் அடிப்படை யில், சத்துணவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முட்டை முதல் பிரியாணி வரை
சத்துணவில் முதல் மற்றும், மூன்றாவது வாரத்தில், திங்கள் - வெஜ் பிரியாணி, முட்டை; செவ்வாய் - கொண்டக்கடலை புலாவ், முட்டை; புதன் - தக்காளி சாதம், முட்டை; வியாழன் - சாம்பார் சாதம், முட்டை; வெள்ளி - கருவேப்பிலை அல்லது கீரை சாதம், முட்டை.இரண்டாவது மற்றும், நான்காவது வாரத்தில் பிசிபேளாபாத், மசாலா முட்டை; மீல் மேக்கர், முட்டை; புளி சாதம், தக்காளி முட்டை; எலுமிச்சை சாதம், முட்டை; சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வழங்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை