போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு ஏழை பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்களை சென்னை மாநகராட்சி வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி:
சென்னை மாநகரில் படித்த ஏழை, எளிய பட்டதாரி இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சிகளை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது.
இதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மத்திய அரசு தேர்வாணைய (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி சென்னை செனாய் நகர் அம்மா அரங்கில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி சென்னை சைதாப்ட்டையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மையங்களிலேயே வழங்கப்படுகின்றன. விருப்பமுள்ள ஏழை பட்டதாரி மாணவர்கள் இந்த விண்ணப்பத்தை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை