கல்வித் துறையில் மாநில அளவில், 70க்கும் மேற்பட்ட டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருந்தன. டி.இ.ஓ., பதவி உயர்வு 'பேனல்' ரெடியாக இருந்தபோதும் காரணமே தெரியாமல் பதவி உயர்வு அளிப்பதில் இழுத்தடிக்கப்பட்டது. இதனால், டி.இ.ஓ., பதவியே கிடைக்காமல் தலைமையாசிரியர் பலர் ஓய்வு பெறும் சூழ்நிலை ஏற்பட்டது.
வழக்கமாக, டி.இ.ஓ., சி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வின் போது, தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வடக்கிலும், வட மாவட்டத்தினருக்கு, தெற்கிலும் பணியிடம் ஒதுக்கி, அலைக்கழிப்பது கல்வித்துறையில், பல ஆண்டு வழக்கம். ஆனால், இந்தாண்டு பெரும்பாலும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் 'செலவில்லாமல்' பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கல்வித்துறையில் அதிகாரிகள் பதவி உயர்வு என்றாலே, துாரத்தில் உள்ள மாவட்டங்களில் தான் பணியிடங்கள் ஒதுக்கப்படும். அதன்பின் 'கவனிக்க வேண்டியவர்களை கவனித்து' மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு பணிமாற்றம் பெறுவர். ஆனால், தற்போதைய இயக்குனர் கண்ணப்பனின் முயற்சியால், பலருக்கும் சொந்த மாவட்டங்களிலேயே, பணியிடங்கள் கிடைத்துள்ளன.மதுரையை சேர்ந்த துரைப்பாண்டிக்கு பரமக்குடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், மதுரை மாவட்டத்தில் மேலுார் காலியாக இருந்ததால், கல்வித்துறையே முன்வந்து அவருக்கு மேலுாரை ஒதுக்கியது. இவர்களில் பலர், ஒருசில மாதங்களில் ஓய்வுபெறும் நிலை உள்ளதால், அவர்களுக்கு கல்வித்துறை சிறப்பு 'கரிசனம்' காட்டியுள்ளது. இது வரவேற்கத்தக்கது, என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை