Ad Code

Responsive Advertisement

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கைகளின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் மட்டும் 51 சதவீதம் அளவுக்கு தேர்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அந்த ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆண்டில், பணி நியமனத்துக்காக மட்டும் 15 ஆயிரத்து 668 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement