தமிழகத்தில் இதுவரை 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் பேசியது:
தமிழகத்தில் மிகச் சிறந்த திட்டமாக, விலையில்லாத மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதுவரை மொத்தம் 33 லட்சத்து 19 ஆயிரத்து 866 கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதில், 22 லட்சத்து 19 ஆயிரத்து 866 வழங்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு, ஐந்தாம் கட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 லட்சம் மடிக்கணினிகள், டிசம்பருக்குள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் 345, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் வழியாக 333, முதன்மை வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் 4,541, கிராமப்புற வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 4,167, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழியாக 171, கிராமப்புற ஆர்வலர்கள் மூலம் 477 என மொத்தம் 10,034 இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டலம்: தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு 1,322.25 ஏக்கர் நிலம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-14 ஆண்டில் மொத்தமுள்ள எட்டு மண்டலங்களில் 32 தகவல் தொழில்நுட்பம்- அதுசார்ந்த நிறுவனங்களில், 38,000 பேர் நேரடியாகவும், 76,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அதன் எண்ணிக்கை 54 நிறுவனங்களாக அதிகரித்துள்ளது என்றார் சுப்பிரமணியன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை