Ad Code

Responsive Advertisement

தொடக்க/பள்ளிக்கல்வி இயக்குனர்களுடன் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " மாநில நிர்வாகிகள் சந்திப்பு

10/08/2015 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களையும்  பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கையும்  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " மாநில நிர்வாகிகள், பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

அச்சமயம் 02/08/2015 அன்று விருதுநகரில் நடைபெற்ற "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " - இன் மாநில தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளையும் மாநிலத் தலைவர் திரு.பாலமூருகபாண்டியன் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அனைவருக்கும் இயக்குனர்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர்.   

பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்கள் மாநில நிர்வாகிகள் அனைவரும் அரசுக்கும் புரட்சித்தலைவி, மாண்புமிகு தமிழக முதல்வர் "அம்மா" அவர்களுக்கும், அரசுக்கும் பேரவைக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் எனவும்,    தங்களுக்கு வழங்கப்பட்ட  பதவிகளை,  பொறுப்புடன் பிற ஆசிரியர்களுக்காக பணியாற்ற வேண்டும் எனவும்    கூறினார்.

மாநில பொருளாளர் திரு.இலட்சுமணன் அவர்கள் அனைவருக்கும் பேரவையின் சார்பாக நன்றிகளை  தெரிவித்தார் .   

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement