குழந்தைகளிடம் சுகாதார விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கிலும், தனி மனித ஒழுக்கம் வளரும் விதத்திலும், பள்ளிகளில் சுகாதாரக்குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளிகளில் குழந்தைகளுக்கு நற்பண்புகள், சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து கற்பித்தலும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், "சிலபஸ்' முடிப்பதில் மட்டுமே ஆசிரியர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மாணவர்களின் உடல் நலம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை.
அரசு பள்ளிகளில் படிக்கும் பல குழந்தைகள், அதிகளவில் தலைமுடி வளர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். தலைக்கு, சரிவர எண்ணெய் தேய்ப்பதில்லை. சில குழந்தைகள், குளிக்காமல் பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். இன்னும் சிலர், அழுக்கேறிய சீருடை அணிந்து காணப்படுகின்றனர். கைவிரல், கால் விரல் நகங்களை வெட்டும் பழக்கம், பல குழந்தைகளுக்கு சுத்தமாக இல்லை.நகங்களை பற்களால் கடிப்பது, விரல் சூப்புவது, மண்ணில் விளையாடி விட்டு கை கழுவாமல், சாப்பிடுவது, ரோட்டோரங்களில் விற்கும் ஈ மொய்த்த பலகாரங்களை வாங்கித் உண்பது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்கள், பல மாணவர்களிடம் காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளில், கல்வி கற்பிப்பதை போலவே, மாணவர்களின் சுகாதார பழக்க வழக்கங்களிலும், அப்பள்ளி ஆசிரியர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்களின் சுகாதாரமான பழக்க வழக்கங்களில், ஆசிரியர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே, கசப்பான உண்மை. சுகாதாரமற்ற பழக்கங்களால், நாளடைவில் மாணவ, மாணவியர் உடல் ரீதியாக பாதிப்படைகின்றனர்.
வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சிறிய வயதில் உண்டாகும் இந்த சுகாதாரமற்ற பழக்கம், பெரியவர்களாக வளர்ந்த பின்பும் தொடர்கிறது. இதற்கு தீர்வாக, பள்ளிகளில் சுகாதாரக்குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சுகாதாரமான பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியம். சில பள்ளிகளில், மூத்த மாணவர்களை கொண்டு, சுகாதாரக்குழு ஏற்படுத்தப்பட்டு, மற்ற மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். ஆனால், பல பள்ளிகளில் சுகாதாரக்குழு உருவாக்கவில்லை; அது தவறு. சுகாதாரமான பழக்கங்களை பின்பற்றும் மாணவர்களுக்கு, பரிசு தந்து ஊக்குவிப்பதால், அது, மற்ற மாணவரின் தனி மனித ஒழுக்கம் மேம்பட மிகவும் உறுதுணையாக இருக்கும்,' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை