பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடக்கும். இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, பல சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று துவங்குகிறது.முதற்கட்டமாக, இன்று காலை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு நடக்கிறது. ஏ.இ.இ.ஓ.,க்களைப் பொறுத்தவரை, அதிகாரியாக இருந்தால், அவர்கள் தங்களுக்கான குறிப்பிட்ட மாதத்தில் ஓய்வு பெற்று விட வேண்டும். மாறாக, ஆசிரியராக இருந்தால், அவரது ஓய்வுக்கான மாதம் வந்தாலும், அவர் அந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை பணியாற்ற முடியும். இந்த வசதிக்காக, ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள், மீண்டும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, ஆசிரியர் பணிக்கு திரும்புவர்.
ஏ.இ.இ.ஓ.,க்கள், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அரசின் நிதி உதவி அளித்தல், ஆசிரியர் நியமனம் போன்ற, பல நடவடிக்கைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருப்பதால், தனியார் மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு, மாறுதல் பெற அதிக போட்டி உள்ளது.
இருப்பினும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, இடமாறுதல் பெற, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஏ.இ.இ.ஓ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை