மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகள் தரப்பில் பதிலளிக்க, நான்கு வாரம் அவகாசம் அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் பல மழலையர் பள்ளிகள், அனுமதியின்றி நடந்து வருகின்றன; அதிக கட்டணம் வசூலிக்கின்றன. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்' என, கோரப்பட்டது.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, ''புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன,'' என்றார்.
இதையடுத்து, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'மழலையர் பள்ளிகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து எங்கள் கருத்துகளை பதிவு செய்ய வேண்டி உள்ளது; மனுவாக தாக்கல் செய்கிறோம். அதற்கு, நான்கு வாரம் அவகாசம் தேவை' என, கோரினர்.அவர்கள் கோரிய படி, நான்கு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பின், அரசு தரப்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்கலாம். இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை