ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தத் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:
தெற்கு மண்டலத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வு 12 நகரங்களில், 236 மையங்களில் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவுகளில் (காலை 10 மணி முதல் 12 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை) இந்தத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கு அனுமதிச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனுமதிச் சீட்டை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான http://www.sscsr.gov.in/CGL2015-TIER-AC-GET.htm என்ற இணைய வழியில் அனுமதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலையில் தேர்வு எழுதுவோர் தேர்வு மையத்தில் காலை 9 மணி அளவில் இருக்க வேண்டும். தேர்வு மையத்தின் நுழைவாயில் காலை 9.30 மணிக்கு மூடப்படும். மதியம் தேர்வு எழுதுவோர் பகல் 1 மணிக்கு முன்பு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்தின் நுழைவாயில் பகல் 1.30 மணிக்கு மூடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை