Ad Code

Responsive Advertisement

தலைமை ஆசிரியர்கள்75 பேருக்கு 'புரமோஷன்'

தமிழக தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை மறுநாள் நடக்கிறது.

தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி கவுன்சிலிங் நடக்கவுள்ளது.

இத்துடன், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சிலிங், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி அரங்கில், வரும் 8ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement