அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மதுரை அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும் எல்.எல்.எம். முதுநிலை சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தனியே அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை