தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை கட்டப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, ஓராண்டு கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், புதிய சட்டம் கொண்டு வருவதற்கான உயர்மட்டக் குழுவை ஒரு மதத்துக்குள் அமைக்க வேண்டும்.
உயர் மட்டக் குழு 6 மாதத்துக்குள் புதிய வரைவு கொண்டு வர வேண்டும். பொது மக்கள் கருத்தை கேட்ட பிறகு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.வேலு தொடர்ந்த பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை