டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு உத்வேகம், ஊக்கம் அளிக்கும் வகையில் பள்ளிச்சான்றிதழ் முதல் அடையாள அட்டை வரை அனைத்தையும் ஆன் லைன் மூலம் (இணையதளம்) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதில் இ-பாஸ்டா ஆப்ஸ் மூலம், பள்ளிப்பாடநூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். செயல்முறை தேர்வுக்கான வீடியோக்கள், பாடங்களுக்கான ஆடியோ பைல்களையும் பதிவிறக்கம் செய்து செல்போன், டேப்ளட், கணினிகளில் சேமிக்க முடியும். குறிப்பாக எதிர்காலத்தில் மாணவர்களின் புத்தகச்சுமையை பெருமளவு இது குறைக்கும் என்றார். டிஜிலாக்கர் போர்டல் குறித்து அந்த அதிகாரி கூறுகையில், ஆதார் எண் மற்றும் மொபைல் எண் உள்ள எவரும் டிஜி லாக்கர் போர்டலில் உறுப்பினராக சேர்ந்து இதன் வசதியை பயன்படுத்தமுடியும். பள்ளி சான்றிதழ் முதல், பான்கார்டு, வாக்காளர் அட்டை, என அனைத்து சான்றிதழ்களையும் இந்த போர்டலில் பாதுகாக்க முடியும். மேலும், இதை எந்த அரசு அலுவலகத்திற்கும் இ மெயில் மூலம் எளிதாக அனுப்பலாம். இந்த போர்டலில் இணைந்தவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அரசு சான்றிதழ்களும் இந்த போர்டல் வழியாக பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் போலி சான்றிதழ் உருவாவதை தடுக்க முடியும் என்றார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை