Ad Code

Responsive Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

1.முதலில் ஏதேனும் ஒரு தேர்வுக்கு மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் .டி.என் .பி.எஸ் .சி தேர்வுக்கு 3 மாதம் படிப்பது,வங்கி தேர்வுக்கு மூன்று மாதம் படிப்பது ,பின் SSC க்கு படிப்பது இவற்றை தவிருங்கள் .ஏனெனில் ஒவ்வொரு தேர்வும் ஒவ்வொரு அணுகு முறையை கொண்டது .ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் போக்கு வேண்டாம் .அது வெற்றி காலத்தை அதிகப்படுத்தும் .வயதும் வீணாகும் .

2.தேர்வு வாரியத்தின் மீது கேள்வி கேட்காத நம்பிக்கை வையுங்கள் .அதாவது தேர்வு ஒழுங்காக நடக்குமா ?நேர்மையாக நடக்குமா ?என அரை மனதுடன் இல்லாமல் முழுமையான நம்பிக்கை வையுங்கள் .தற்போது டி என் பி.எஸ் சி சிறப்பாக செயல் பட்டு வருகிறது .

3.உங்கள் மீது அதீத நம்பிக்கை வையுங்கள் .என்னால் முடியாது என்றால். வேறு யாராலும் முடியாது என்ற நம்பிக்கை யை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள் .

4.லட்சக்கணக்கான போட்டியாளர்கள் இருக்கிறார் கள் என்பதை மறந்து விடுங்கள் .அது நமக்கு நம்பிக்கை தளர்ச்சி யை ஏற்படுத்தும் .ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை என்பதை மனதில் வையுங்கள் .

5.சிலபஸை கையில் வைத்துக்கொண்டு படியுங்கள் .நாம் பாடங்கள் முடிக்க முடிக்க நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் 

6.குறிப்பு எடுத்துக்கொண்டு படியுங்கள் .அது பாடத்தை மறக்க செய்யாது .கடினமான கேள்விக்கு இந்த முறையில் படிப்பது பெரிதும் கை கொடுக்கும் .

7.பொது அறிவுக்கு ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தமிழ் பகுதிக்கு 4 மணிநேரம் கணிதம் பகுதிக்கு 2 மணிநேரம் ,செய்திதாளுக்கு 1 மணிநேரம் ஒதுக்குங்கள் .

8.ஏதாவது ஒரு பயிற்சி மையத்திற்கு செல்வது நலம் .குறைந்தது மாதிரி தேர்வு எழுதவாவது செல்லுங்கள் .அப்போதுதான் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும் .உங்கள் பலவீனமான பகுதி எது ?அதை எப்படி சரிசெய்வது என்ற ஐடியா அங்கு தான் கிடைக்கும் .

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement