Ad Code

Responsive Advertisement

குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?- ஆன்லைனில் தெரிந்துகொள்ள வசதி!



குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அதிகாரி (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 26-ந் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவுசெய்து விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement