சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 538 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில், மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக 1 லட்சத்து 51 ஆயிரத்து 910 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 135 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
என்ஜினீயரின் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலை உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம், மாணவர் சேர்க்கை செயலாளர் உத்தரியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 15 மாணவர்கள் 200–க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. கீர்த்திபாலன், சூலூர், கோவை, 2. நிசாந்த்ராஜன், அரூர், தர்மபுரி, 3. முகேஷ்கண்ணா, திருச்சி, 4. நிவாஸ், பரமத்திவேலூர், நாமக்கல், 5. சரவணகுமார், ஆலப்பாக்கம், சென்னை, 6. கிரிதரன், அவிநாசி, கோவை, 7.பிரவீன்குமார், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், 8. மோனீஷ், ஈரோடு, 9. மோகன்குமார், ஈரோடு, 10. விக்னேஷ்வரன், ஈரோடு, 11. கார்த்திக்ராஜா, திருச்செங்கோடு, நாமக்கல், 12. மனோஜ், காரமடை, கோவை, 13. விஷ்ணு, குமாரபாளையம், நாமக்கல், 14. தினேஷ்குமார், சத்தியமங்கலம், ஈரோடு, 15. ரோகித்போஸ், திண்டுக்கல்.
என்ஜினீயரிங் மாணவ– மாணவிகளுக்கான கலந்தாய்வு வருகிற 28–ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் விளையாட்டு பிரிவுக்கான கலந்தாய்வும், 29–ந்தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.
ஜூலை 1–ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. கட்ஆப் தரவரிசை, மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஜூலை 30 வரை கவுன்சிலிங் நடக்கிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை