குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் "சைல்டு லைன்' இலவச தொலைபேசி (1098) சேவை மையம் தொடக்க விழா சென்னை ஒக்கியம், துரைப்பாக்கத்தில் உள்ள எழில் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி புதிய சேவை மையத்தைத் தொடக்கி வைத்தார். இதுகுறித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் "செஸ்' தன்னார்வ அமைப்பின் தலைவர் டாக்டர் பி.மனோரமா கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பாலியல் துன்புறுத்தல்கள், ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் உள்பட குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் குறித்து 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில், தொடர்புடைய குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் சைல்டு லைன் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகி அருண்மொழி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் செயற்பொறியாளர் செல்வமணி, செஸ் தன்னார்வ அமைப்பின் திட்ட மேலாளர் வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை