ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதழுடன், மறுபணி நியமனம், மறு திருமணம் ஆகியன செய்யவில்லை என்பதற்கான சான்றையும் அளிக்க வேண்டும்.
இதற்கென தனியான வரையறுக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. இந்தச் சான்றிதழில் சான்றொப்பம் அளிக்க, அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அந்த நடைமுறைக்குப் பதிலாக இப்போது புதிய நடைமுறையைப் பின்பற்றலாம் என கருவூலம்- கணக்குத் துறை, தமிழக அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி, சான்றொப்பம் அளிக்க அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்களே சுய சான்றொப்பமிட்டு சான்றிதழை அளிக்கலாம் என கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும், தாங்கள் மறுபணி நியமனமோ அல்லது மறுதிருமணமோ செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை அவர்களே சுய சான்றொப்பமிட்டு அளிக்கலாம். இந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையும், அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களைச் சார்ந்தது என்று நிதித் துறை செயலாளர் சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதமானது சட்டப் பேரவைச் செயலகம், ஆளுநர் மாளிகை, துறை அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதழுடன், மறுபணி நியமனம், மறு திருமணம் ஆகியன செய்யவில்லை என்பதற்கான சான்றையும் அளிக்க வேண்டும்.
இதற்கென தனியான வரையறுக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. இந்தச் சான்றிதழில் சான்றொப்பம் அளிக்க, அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அந்த நடைமுறைக்குப் பதிலாக இப்போது புதிய நடைமுறையைப் பின்பற்றலாம் என கருவூலம்- கணக்குத் துறை, தமிழக அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி, சான்றொப்பம் அளிக்க அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்களே சுய சான்றொப்பமிட்டு சான்றிதழை அளிக்கலாம் என கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும், தாங்கள் மறுபணி நியமனமோ அல்லது மறுதிருமணமோ செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை அவர்களே சுய சான்றொப்பமிட்டு அளிக்கலாம். இந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையும், அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களைச் சார்ந்தது என்று நிதித் துறை செயலாளர் சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதமானது சட்டப் பேரவைச் செயலகம், ஆளுநர் மாளிகை, துறை அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை