இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களிடமும், தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்துள்ளதால், பள்ளிகளுக்கு, அரசின், 97 கோடி ரூபாயை தரக் கூடாது என, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
உத்தரவு:
ஆனால், மத்திய அரசு வெறும், 14 லட்சம் ரூபாய் மட்டுமே அனுமதித்ததால், தமிழக அரசே ஏற்று, 96 கோடி ரூபாய், தனியார் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிட்டது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப் பணமான அரசின் நிதியை, சட்ட விதிகளுக்கு முரணான வகையில், தனியார் பள்ளிகளுக்கு தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழக அரசுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனருக்கும், அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டுகளில், தமிழக சட்டசபையில் வெளியிட்ட அறிக்கைகளில், தனியார் பள்ளிகள், கட்டாயக் கல்வி சட்டத்தில், இலவசமாக மாணவர்களை சேர்க்க முன் வரவில்லை என, கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, 1.36 லட்சம் குழந்தைகளை சேர்த்தனர் என, ஒரு கணக்கை சொல்லி, அதற்காக அரசு நிதியை ஒதுக்கியுள்ளனர்; இது ஆபத்தானது. நர்சரி பள்ளிகள், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்றவற்றிற்கு, அனைத்து மாணவ, மாணவியரிடமும் கட்டணம் பெற்று விடுகின்றனர். இலவச சேர்க்கையில், சில குழந்தைகளிடம் கல்விக் கட்டணம் பெறாவிட்டாலும், சீருடை, புத்தகம், நோட்டுகள், கட்டட நிதி என, வசூலித்து விட்டனர். ஆனால், மத்திய அரசின் கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களிடம் எந்த வகையிலும் கட்டணம் பெறக் கூடாது. ஒரு மாணவருக்கு ஆகும் செலவானது, மாணவர்களின் மதிய உணவுக்கும் சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது.
சந்தேகம்:
ஆனால், மாணவர்களிடமும் பணம் வசூலித்து விட்டு, கூடுதலாக அரசும் நிதி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? இலவச மாணவர் சேர்க்கைக்கு என, பள்ளி களிடமோ, அரசிடமோ கணக்குகளோ, ஆவணங்களோ இல்லை. மேலும், இப்பள்ளிகளுக்கு ஒரு பாடத்திட்டமோ, அரசு வரையறுத்த விதிமுறைகளோ இல்லை. தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான இடங்களில் நியமிக்கப்பட வில்லை. எனவே, அரசு நிதி, 97 கோடி ரூபாயை, தனியார் பள்ளிகளுக்கு எந்தவித ஆவணங்களும், ஆதாரங்களும் இல்லாமல், அவசரமாக வழங்க முடிவு எடுத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை