பெங்களூரு: சமீபத்தில் வெளிவந்த, 10ம் வகுப்பு முடிவில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத பள்ளிகள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, கல்வித் துறை தீர்மானித்து உள்ளது.
கடந்த 2014 - 2015ம் கல்வியாண்டு, 10ம் வகுப்பு தேர்வில், அரசு நிதியுதவி பெறும் இரண்டு பள்ளிகள், நிதியுதவி பெறாத, 34 பள்ளிகளில், ஒரு மாணவரும் தேர்ச்சி பெறாமல், 'பூஜ்ய' சாதனை காட்டியுள்ளன. கடந்த இரு ஆண்டுகளாக, ராமசாமி பாளையா இமானுவேல் உயர்நிலைப் பள்ளி, நாகஷெட்டி பாளையா மஞ்சுநாத சாமி உயர்நிலைப் பள்ளி, பைரசந்திரா குருராஜா உயர்நிலைப் பள்ளி, கோரி பாளையா விஸ்டம் உயர்நிலைப் பள்ளி, நாயண்டஹள்ளி ரோஹிணி இண்டர்நேஷனல் பப்ளிக் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில், ஒரு மாணவர் கூட, 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 'திறமையான ஆசிரியர்கள் இல்லாததால், இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்' என்று, பெற்றோருக்கு, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இப்பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
கல்வித் துறை கமிஷனர், மொஹமத் மொஹிசின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, உதவி இயக்குனர்கள் நேரில் சென்று, 10ம் வகுப்பு தேர்வில் மோசமான நிலை ஏற்பட்டதற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும். கர்நாடகா கல்விச் சட்டம், 39வது விதிமுறையின் கீழ், அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை, அருகிலுள்ள வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டு உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை