Ad Code

Responsive Advertisement

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

 தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் 1241 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 26-இல் எழுத்து தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 
 இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளன. இதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன. 
 இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், குரூப் 2 விண்ணப்பித்ததற்கான சான்று, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றுடன் சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் மே 29-க்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும்.

Post a Comment

5 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement