தமிழகத்தின் கோவை, ஈரோடு உள்பட நாட்டின் 29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப் படியையும் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப் படியையும் வழங்குவதற்காக, 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சில நகரங்களை மறுசீரமைப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மறுசீரமைப்பானது 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக, 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ. 128 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றார் ரவிசங்கர் பிரசாத். வீட்டு வாடகைப் படியைப் பொறுத்தவரை புணே, ஆமதாபாத் ஆகிய 2 நகரங்கள் ஒய் - பிரிவிலிருந்து, எக்ஸ் - பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஈரோடு, நெல்லூர், குர்கான், குல்பர்கா, திருச்சூர், மலப்புரம், கண்ணூர், கொல்லம், நொய்டா, சிலிகுரி உள்ளிட்ட 21 நகரங்கள் இசட் - பிரிவில் இருந்து ஒய் - பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்துப் படியைப் பொறுத்தவரை கோவை, பாட்னா, கொச்சி, இந்தூர், காஜியாபாத் ஆகிய நகரங்கள் பிற இடங்கள் என்ற பிரிவில் இருந்து முன்னேறிய பகுதிகள் பிரிவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை