Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது. 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி கே.தேவதாநிலானியும், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமியை சேர்ந்த தனபிரியா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனர். 

இதே போல் கரூர் பரணி பார்க் பள்ளியில் பயின்ற திவ்யா, நிவேதா, சுபஸ்ரீ ஆகிய மூன்று மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ரசிகா, மதுமித்ரா, ரேஷ்மா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தனர். கரூரில் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாவட்டத்தில் மாநில அளவில் முதல் இடத்தை இரண்டு தனியார் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநில அளவில் 499 மார்க் பெற்று 41 பேரும், 498 மார்க் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 192 பேரும், மூன்றாவது இடம் 497 மதிப்பெண்கள் பெற்று 540 பேர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement