தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் சார்பில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2012ல் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கடந்த மாதம் 2ம் தேதி மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் விபரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகள் விண் ணப்பதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை