Ad Code

Responsive Advertisement

கூட்டுறவு சங்க உதவியாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் சார்பில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 3589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2012ல்  எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. எழுத்து தேர்வு மற்றும்  நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கடந்த மாதம் 2ம் தேதி மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தின்  இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் விபரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் www.tncoopsrb.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவுகள் விண் ணப்பதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement